கோயிலில் விளக்கு அருகே நின்ற மாணவியின் உடையில் தீப்பிடித்து எரிந்து விபத்து

சேலத்தில் கோயில் விளக்கு அருகே நின்ற பள்ளி மாணவியின் உடையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோயிலில் விளக்கு அருகே நின்ற மாணவியின் உடையில் தீப்பிடித்து எரிந்து விபத்து
x
சேலம் மாவட்டம் மேச்சேரி தேத்திகிரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் - புனிதா தம்பதியின் மகள் விஜயபாரதி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி அருகே உள்ள கோயிலுக்கு சென்ற மாணவி விளக்கு அருகே நின்ற போது அவரது உடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுற்றறிக்கை ஒன்றை கொடுத்து அனுப்பியதாகவும், அப்போது பள்ளியின் வாசலில் இருந்த கோயிலுக்கு சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாகவும் மாணவியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். வகுப்பறையில் இருந்த மாணவியை வெளியே அனுப்பியதால் இந்த சம்பவம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்