செவிலியர் நியமனம் - தற்போதைய நிலை நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செவிலியர் நியமனம் - தற்போதைய நிலை நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
x
சென்னையை சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், 2015-ஆம் ஆண்டு தேர்வு பட்டியலில் இருந்து 2016-ம் ஆண்டு 498 பேரும், 2017ஆ-ம் ஆண்டு 950 பேரும் செவிலியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் செவிலியர் படிப்பு முடித்து வரும் நிலையில், 2015-ல் தேர்வு செய்யப்பட்டவர்களை செவிலியர்களாக நியமிப்பது சட்டவிரோதம்  என குறிப்பிட்டுள்ளார். எனவே புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்வு நடவடிக்கை தொடர்பாக  தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டு,  விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்