செவிலியர் நியமனம் - தற்போதைய நிலை நீடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
2015ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த உதயகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், 2015-ஆம் ஆண்டு தேர்வு பட்டியலில் இருந்து 2016-ம் ஆண்டு 498 பேரும், 2017ஆ-ம் ஆண்டு 950 பேரும் செவிலியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் செவிலியர் படிப்பு முடித்து வரும் நிலையில், 2015-ல் தேர்வு செய்யப்பட்டவர்களை செவிலியர்களாக நியமிப்பது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார். எனவே புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்வு நடவடிக்கை தொடர்பாக தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Next Story