அமாவாசைகளிலேயே சிறந்த மஹாளய அமாவாசை...

அமாவாசைகளிலேயே சிறப்புக் குரியதாக கருதப்படும் மஹாளய அமாவாசை குறித்த தகவல்கள்
அமாவாசைகளிலேயே சிறந்த மஹாளய அமாவாசை...
x
* புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால் அதற்கான முழுப் பயனையும் பெறலாம்.

* ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது. 

* இதையொட்டி வரும் மகாளய பட்சம், ஆவணி மாதத்தில், பெளர்ணமி முடிந்த மறுநாள் தொடங்குகிறது. அதிலிருந்து புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை - அதாவது 14 நாட்கள், மகாளய பட்சம் ஆகும். 

* மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அதற்கான முழுப் பயனையும் பெறலாம். 

* மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள், பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது, மிகவும் நல்லது ஆகும்.

* மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.

* இந்நாட்களில் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

* மகாளய அமாவாசையில் செய்யும் அன்னதானம், முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் முன்னோர்கள், மிகவும் திருப்தியுடன், தமது சந்ததியினரை மன நிறைவுடன் வாழ்த்துவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்