புரட்டாசி மகாளய அமாவாசை : நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, தமிழகம் முழுவதும் மிகவும் புனிதமாக கருதப்படும் நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கப்பட்டு வருகிறது.
புரட்டாசி மகாளய அமாவாசை : நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x
ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், அக்னிதீர்த்த கடலில் புனித நீராடினர். அதன்பின் கடற்கரையில் அமர்ந்து, தங்கள் குடும்பத்தின் நலனுக்காக சங்கல்ப பூஜையும், அதனை தொடர்ந்து இறந்துபோன தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர். அதன் பின்னர் ராமநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்து, அமாவாசை விரதத்தை முடித்தனர். பக்தர்கள் நலன் கருதி 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் :



புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில், அதிகாலையிலேயே 500க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இறந்த மூதாதையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பண்டங்கள், பழங்கள் படையலிட்டு, திதி கொடுத்தனர். 

கன்னியாகுமரி :



இதேபோல, முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, இறந்த மூதாதையர்களுக்கு தர்பணம் கொடுத்தனர். பூஜை செய்த, அந்த பொருட்களை கடலில் கரைத்து முன்னோர்களை வழிபட்டனர். பின்னர், கடற்கரையில் உள்ள பரசுராம் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சர்வ தீர்த்தம் உள்ளிட்ட குளக்கரைகளில் குவிந்த திரளான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கினர். மாவு பிண்டங்களை குளங்களில் கரைத்த பக்தர்கள், பசுக்களுக்கு  அகத்திக்கீரையை தானமாக வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்