பாதுகாப்பற்ற நிலையில் தனியார் பள்ளி : மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து

பாதுகாப்பற்ற நிலையில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியை கல்வி அலுவலர் ஆய்வு செய்து சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற நிலையில் தனியார் பள்ளி : மாணவ, மாணவிகளின் உயிருக்கு ஆபத்து
x
திருண்ணாமலை மாவட்டம் மங்கலம் பகுதியில் அரைகுறையாக கட்டப்பட்ட நிலையில், தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சில அறைகளில், ஜன்னல்கள், கதவுகள் ஏதும் அமைக்கப்படவில்லை. மேலும் விளையாட்டு மைதானம் அருகில், 60 அடி ஆழம் கொண்ட பாழடைந்த கிணறு ஒன்று திறந்த நிலையில் உள்ளது. இதனால், மாணவர்கள் ஆபத்தின் விளிம்பில் படித்து வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில்,  பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட நீதிபதி மகிழேந்தி, இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆய்வு செய்து பள்ளிக்கு சீல் வைக்க உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்