கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் - கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது

சென்னையில் தெருநாயை அடித்து கொன்ற புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட நாய் - கல்லூரி மாணவரின் புகாரில் 3 பேர் கைது
x
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நிஷால் ஜெயந்த், சென்னை முகப்பேரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில், அவரது குடியிருப்பில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்றை அந்த குடியிருப்பின் செயலாளர் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட மூன்று பேர் கொடூரமாக அடித்துக் கொலை செய்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, செல்போனில் வீடியோவாக எடுத்து, மிருகவதை எதிர்ப்பு ஆதரவாளர்களின் உதவியோடு ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விலங்குகளை கொள்ளுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், ஜாமீனில் அன்றே விடுவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்