10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 35 வயது இளைஞர்

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
10 ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 35 வயது இளைஞர்
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி  அருகேயுள்ள கோட்டூர் சன்னதி தெருவை சேர்ந்த அனிதா 10 ஆம் வகுப்பு படித்துவருகிறார். அதே பகுதியை சேர்ந்த  ரவி பிரகாஷ் என்பவர் மாணவி அனிதாவை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததில், அவர் கர்பமானார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி மற்றும் அவரது தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து,இருவரும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மாணவி, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கோட்டூர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் ரவிபிரகாஷ்-ஐ கைது செய்து மன்னார்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திதிருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்