ஓமலூர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்தியதால் பரபரப்பு...

ஓமலூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஓமலூர் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த இளைஞரை பீர் பாட்டிலால் குத்தியதால் பரபரப்பு...
x
* ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி பகுதியை சேர்ந்த வையாபுரி மகன் சக்திவேல், ஒசூரில் வேலைசெய்து வருகிறார்.  நேற்று இரவு   ஒசூரில்  இருந்து சேலம் வந்த அவர், வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக தாக்கி, பீர் பாட்டிலால் முதுகில குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளது . 

* இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  5 இளைஞர்கள் நேற்று இரவு  4 இடங்களில் வழிப்பறி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சேலம் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்