ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதய விழா : நாளை கொடியேற்றம்

ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் நாளை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதய விழா : நாளை கொடியேற்றம்
x
ராஜராஜ சோழனின் 1033-வது ஆண்டு சதய விழா அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் முதல் நாளில் கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

2வது நாள் நிகழ்ச்சியாக அரசு சார்பில் ராஐராஐ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை தஞ்சை பெரிய கோவிலில் கோடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 60ஆண்டுகளுக்கு பிறகு, ராஜராஜ சோழன் மற்றும் லோக மாதேவி சிலைகள் மீட்கப்பட்ட நிலையில் நடைபெறும் முதலாவது சதய விழா என்பதால் இதற்கு முன்பு நடைபெற்றதை விழாக்களை விட சிறப்பாக விழா இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்