நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : அணைகளின் நீர்மட்டம் உயர்வு
x
* காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர் மட்டம் 102 அடியாக அதிகரித்துள்ளது.

* அதேபோல் நெல்லை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 105 அடியாக உயர்ந்துள்ளது.

* 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 84 அடியாகவும் அதிகரித்துள்ளது.


* அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 68 அடியாகவும் உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்