தமிழகத்திற்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை : முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற  கூட்டத்தில்  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் , மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு  துறை சார்ந்த செயலாளர்களும் பங்கேற்றனர். வருவாய், பொதுப்பணி, உள்ளாட்சி, காவல் மற்றும் தீயணைப்பு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, மழையையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தற்காலிக நிவாரண முகாம்கள், சுகாதார வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்