கடலூர் சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலை முயற்சி...

கடலூர் மத்திய சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலை முயற்சி...
x
கடலூர் மத்திய சிறையில் மீண்டும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாராயம் விற்ற வழக்கில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல், கடலூர் சிறையில் விசாரணை கைதியாக இருந்துவரும் முருகன் என்பவர், தனது உள்ளாடையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவருக்கு, கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே சிறையில் கடந்த வார‌ம் மன்சூர் அலி என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒரு கைதி தற்கொலைக்கு முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்