குரு பெயர்ச்சி : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குரு பெயர்ச்சி :  ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
* துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியானார். கும்பகோணம் அருகே உள்ள  குருஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.  

* நேற்று அதிகாலை இரண்டாம்  கால யாக பூஜை முடிந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றன.. பின்னர் மலர் அலங்காரத்துடன்  குருபகவான் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், இரவு  பத்து - ஐந்து மணியளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார். 

* இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபகவானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர். 

 

Next Story

மேலும் செய்திகள்