பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...
பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் பணிபுரிந்து வரும் உதவிப் பேராசிரியர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பெண் உதவி பேராசிரியர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் புகார் அளித்த மாணவியை, திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் கல்லூரிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. ஆனால் 20 நாட்களாகியும் அந்த மாணவி கல்லூரிக்கு செல்லாததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story