சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி - தீர்ப்பை மறுஆய்வு செய்ய இராமகோபாலன் வேண்டுகோள்

சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி - தீர்ப்பை மறுஆய்வு செய்ய இராமகோபாலன் வேண்டுகோள்
x
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனைவரும் வழிபடலாம் என்ற  தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்து 
முன்னணி நிறுவனர் இராம கோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சமய வழிபாட்டில் சட்டத்தின் பார்வை கொண்டு தீர்ப்பு சொல்வது தவறான முன் உதாரணமாகிவிடும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  மக்களின் சமய உணர்வுகளை மதித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் ராமகோபாலன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்