ரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'ரேசன் அரிசியை கடத்துவது மன்னிக்க முடியாத செயல்' என தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'கடந்த 10 ஆண்டுகளில் ரேசன் அரிசி கடத்தலால் ஏற்பட்ட இழப்பு, கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணை, 22ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்