ரூ1,000 கொடுத்தால் 2,000 கிடைக்கும் என மோசடி : இருவர் கைது

திருப்பூரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற இருவரை போலீசார் பிடித்துள்ளனர்.
ரூ1,000 கொடுத்தால் 2,000 கிடைக்கும் என மோசடி : இருவர் கைது
x
திருப்பூரில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முயன்ற இருவரை போலீசார் பிடித்துள்ளனர். வீராணம்பாளையம் சத்யா நகரை சேர்ந்த சதீஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோ​ர்
2 ஆயிரம் ரூபாய் நோட்டை, ஆயிரம் ரூபாய்க்கு தருவதாக கூறி காங்கேயம் பகுதியை சேர்ந்த ஹாரூனை அணுகியுள்ளனர். சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, இருவரையும் பிடித்த போலீஸார் விசாரித்தனர். அப்போது 2 ஆயிரம் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடியில் ஈடுபட்டதை அடுத்து கள்ளநோட்டை அச்சடிக்க பயன்படுத்திய ஸ்கேனர், லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்