ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி - 87 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்ட தடை

ஒகேனக்கலில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி - 87 நாட்களுக்கு பிறகு நீக்கப்பட்ட தடை
x
ஒகேனக்கலில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேறிய உபரி நீராலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல் இயக்கவும், ஐந்தருவி மற்றும் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 87 நாட்களுக்கு பிறகு, ஆற்றில் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக உபரிநீர் குறைந்ததை தொடர்ந்து, குளிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்