கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய மீனவர்கள்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் விரட்டியதால் மீன்பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு - மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய மீனவர்கள்
x
ராமேஸ்வரத்தில் இருந்து  400க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் ஆயிரத்து 600 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் வலையை அறுத்து எறிந்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து மீன்பிடித்தால் சிறை பிடிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, மீன்பிடிப்பதை பாதியிலேயே  நிறுத்திவிட்டு மீனவர்கள் கரை திரும்பினர். 

Next Story

மேலும் செய்திகள்