வடிவேலு காமெடி போல வேறு பேருந்தில் ஏறிச் சென்ற நடத்துனர்...

வடிவேலு படத்தில் வரும் காமெடி காட்சி போல சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர் வந்த அரசு பேருந்தின் நடத்துநர் ஒருவர் குழப்பத்தில் வேறு பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார்.
வடிவேலு காமெடி போல வேறு பேருந்தில் ஏறிச் சென்ற நடத்துனர்...
x
சிதம்பரத்தில் இருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து ஒன்று வந்தது. அதிலிருந்து கீழே இறங்கிய நடத்துநர், கையெழுத்து போட அலுவலகத்திற்கு சென்றுள்ளார். திரும்பி வந்த போது, அங்கு ஒரே நிறத்தில் இரண்டு, மூன்று பேருந்துகள் நின்றிருந்ததால் குழப்பம் அடைந்த நடத்துநர், வேறு பேருந்தில் ஏறிச் சென்றுவிட்டார். நடுத்துநர் வராததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் காக்க வைக்கப்பட்டனர். பின்னர் நடத்துநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் வேறு பேருந்தில் ஏறிச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த பேருந்தில் வந்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்