ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்
சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த அண்ணனூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். அன்னனூர் ரயில் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த ரஞ்சித் என்ற மாணவர் திடீரென அரிவாளை எடுத்து சக மாணவர்களை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர் ரஞ்சித்தை கைது செய்தனர். ரயில் நிலையத்தில் மாணவர்களை ஓட ஓட விரட்டி சென்று வெட்ட முயன்ற சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
Next Story