கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கு: 4 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கில் 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கல்லூரி மாணவர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட வழக்கு: 4 கல்லூரி மாணவர்கள் கைது
x
சென்னை ஆவடி பேருந்து நிலையம் அருகே கடந்த புதன்கிழமை, மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலக் கல்லூரி மாணவர் முகேஷை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போலீசார் 3 பேரை புழல் சிறையிலும், ஒருவரை செங்கல்பட்டு அரசு சிறுவர் காப்பகத்திலும் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்