குடியிருப்பு பகுதியில் மாணவரை ஓடவிட்டு அரிவாள் வெட்டு

கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மாணவர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் மாணவரை ஓடவிட்டு அரிவாள் வெட்டு
x
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 
ஆவடி கோவர்தனகிரி பகுதியை சேர்ந்த முகேஷ் மாநில கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பேருந்து மற்றும் ரயிலில் செல்லும் இவருக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று மாலை ஆவடி பேருந்து நிலையம் அருகே நின்ற முகேஷை, கல்லூரி மாணவர்கள் சிலர், கும்பலாக விரட்டி சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்