கூடங்குளத்தில் 8 நாட்களுக்கு பிறகு, மின் உற்பத்தி துவக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது அணு உலை, எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செயல்படத் துவங்கியது.
கூடங்குளத்தில் 8 நாட்களுக்கு பிறகு, மின் உற்பத்தி துவக்கம்
x
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 2வது அணு உலை, எட்டு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் செயல்படத் துவங்கியது. முதற்கட்டமாக 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 18ம் தேதியன்று, வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட, இரண்டாவது அணுஉலை இன்று காலை உற்பத்தியை தொடங்கியது. நண்பகல் வரையிலும் சுமார் 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஏற்கனவே, எரிபொருள் நிரப்புவதற்காக, கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து முதலாவது அணு உலை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்