மனைவி ஆசையாக வளர்த்த நாயை கொன்ற கணவன்

குடும்ப தகராறில் மனைவி ஆசையாக வளர்த்த நாயை கொலை செய்த நபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.
மனைவி ஆசையாக வளர்த்த நாயை கொன்ற கணவன்
x
சென்னை வேளச்சேரி சாரதி நகர் பகுதியை சேர்ந்த ஜெகநாத்துக்கும் அவரது மனைவி செல்விக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று செல்வி தான் செல்லமாக வளர்த்து வரும் நாயுடன் மேடவாக்கம் சென்றுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தன் தாய் வீட்டுக்கு சென்ற செல்வி, மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, நாய் ஆபத்தான நிலையில் இருந்துள்ளது. மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சையளித்தும் நாய் உயிரிழந்ததால் செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெகநாத்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்