ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழப்பு - உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
சென்னை கிண்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார், விசாரணை நடத்தினர். ரயிலில் அடிபட்டு இறந்தவரில் ஒருவர் தியாகராய நகரை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் சந்திரேசகர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story