இளையோர் நாடாளுமன்றம் - எம்.பி.க்கள் போல் செயல்பட்ட மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகச்சியில் நாடாளுமன்றம் போல் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சி தொடங்கியதும் மாணவர்கள் பதவி பிரமாணம் மேற்கொண்டனர். பின்னர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். இதில் பங்கேற்ற மாணவர்கள், எம்பிக்கள் போல பேசியதோடு, அரசின் செலவுகளை எப்படி குறைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
Next Story