சி.சி.டி.வி இல்லாத இடங்களில் செயின் பறிப்பு

சி.சி.டி.வி இல்லாத இடங்களில் செயின் பறிப்பு : நூதன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
சி.சி.டி.வி இல்லாத இடங்களில் செயின் பறிப்பு
x
சென்னையில் அரும்பாக்கம் ,அண்ணா நகர், நொளம்பூர், முகப்பேர் ஆகிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படாத இடங்களை நோட்டமிட்டு, கொள்ளையர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த சபீர் பாட்ஷா, பிரகாஷ், ராஜ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்கள், காரில் சென்று கண்காணிப்பு கேமரா இல்லாத இடங்களை நோட்டமிட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 41 சவரன் நகை, ஒரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்