நாமக்கல் அருகே கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கள்ளநோட்டு அச்சடித்த பெண் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் அருகே கள்ளநோட்டு அச்சடித்த 4 பேர் கைது
x
பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுகுமார், சொந்தமாக தொழில் செய்து, பல லட்சம் கடனில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடனை அடைப்பதற்காக, தனது கடையில் இருந்த கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மூலம், கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதுபற்றி, அவரது கடையில் வேலை செய்த ரமேஷ் என்பவர், போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், கள்ளநோட்டு தயாரித்த சுகுமார் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த நாகூர்பானு, ரமேஷ், சந்திரசேகரன் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்