கடை உரிமையாளரை செருப்பால் அடித்த திமுகவினர்

பேன்சி கடை உரிமையாளரான ராஜேஸ் என்பவர் திமுக தொண்டர்கள் கடைக்குள் புகுந்து செருப்பால் அடித்த‌தால், விஷம் அருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
கடை உரிமையாளரை செருப்பால் அடித்த திமுகவினர்
x
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடியில் பேன்சி கடை உரிமையாளரான ராஜேஸ் என்பவர் திமுக தொண்டர்கள் கடைக்குள் புகுந்து செருப்பால் அடித்த‌தால், விஷம் அருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனிப்பாடியில் செல்போன் கடை உரிமையாளரை திமுகவினர் தாக்கியதாக கூறி, அவர்கள் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். 

இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் திமுகவினர் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானதை  தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, திமுக தொண்டர்கள்  பூபாலன் மற்றும் பவுன்குமாரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்