"பாம்பன் சுவாமி சமாதியை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்" - உயர் நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம் பாம்பன் சுவாமி சமாதியை மூன்று நாட்களில் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
திருவான்மியூரில் உள்ள சமாதியை மகா தேஜோ மண்டல சபாவிடம் இருந்து, 1984ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது. உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த, மகா தேஜோ மண்டல சபா சமீபத்தில் பாம்பன் சுவாமி சமாதியை மீண்டும் தமது வசமாக்கியது. இந்து சமய அறநிலையத்துறையின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சமாதியை மூன்று நாட்களில் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
Next Story