லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. ஆய்வாளர் - 2 லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு

லஞ்ச வழக்கில் கைதான கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளருக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. ஆய்வாளர் - 2 லாக்கரில் 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிப்பு
x
கடலூரில் 2 வங்கியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 6 லாக்கர்களை,  அவரது மனைவி மங்கையர்க்கரசி முன்னிலையில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். 

அப்போது, 2 லாக்கரை மட்டும் திறந்து சோதனை செய்தபோது, 12 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவரது மனைவிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், மேலும் 4 லாக்கரை சோதனை செய்ய முடியவில்லை.  அங்கு வரும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்படும் என, போலீஸார் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்