மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் கைது
x
* காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஊனமாஞ்சேரியில், 13 வயது மனநலம் குன்றிய சிறுமியை கடத்தி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். காரணைபுதுச்சேரி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, ஊனமாஞ்சேரியை சேர்ந்த  பரமசிவம், சங்கர்,  சிதம்பரம் ஆகிய மூன்று பேர் கடத்தி சென்று மூன்று மாதங்களாக தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். 

* அங்கிருந்து தப்பித்து வந்த சிறுமி இது குறித்து பெற்றோர்களிடம்  கூறியுள்ளார். பெற்றோர் இது குறித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து  பரமசிவம், சங்கர், சிதம்பரம் ஆகிய மூவரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்