ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
x
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீதிபதிகள் வசந்த லீலா, கருணாநிதி ஆகியோர் ஆய்வு செய்து , பக்தர்களிடம் குறைகளையும்  அவர்கள் கேட்டறிந்தனர். தமிழக கோயில்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நீதிபதி ஆய்வு:




இதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துராசா ஆய்வு செய்தார். கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, கட்டடத்தின் தரம் ஆகியவை குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். கோவில் வளாகத்தின் சில பகுதிகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்