இலங்கையில் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்...

எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள், அவர் பிறந்த ஊரான இலங்கை கண்டியில் இன்று நடைபெற்றது.
இலங்கையில் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்...
x
எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்த தின நிகழ்வுகள், அவர் பிறந்த ஊரான இலங்கை கண்டியில் இன்று நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆர் தொடர்பான புகைப்பட கண்காட்சி இடம்பெற்றது. இதனை தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய செங்கோட்டையன் மீனவர் பிரச்சனை தொடர்பாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்யாவுடன் கலந்துரையாடியதாக கூறினார். அடுத்த வாரம், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

"இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை வருவார்"

ஓரிரு மாதங்களில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை வருவார். அதன் பின் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்