காணாமல்போன 3 வயது சிறுமியை மீட்ட போலீசார்
சென்னை சாலையில் ஆதரவற்று நின்றிருந்த 3 வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை சாலையில் ஆதரவற்று நின்றிருந்த 3 வயது சிறுமியை காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே சாலையில் ஆந்திராவை சேர்ந்த வெங்கடேஷ் - லட்சுமி வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது மூன்று வயது மகள் கீதாம்மாவை காணவில்லை என புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். நேற்றிரவு 7 மணிக்கு வியாசர்பாடி கணேசபுரம் சாலையில் ஒரு குழந்தை சாலையில் அழுது கொண்டு இருப்பதை போலீசார் கண்டனர். விசாரணை செய்ததில், புளியந்தோப்பு மருத்துவமனையில் காணாமல் போன வெங்கடேஷ் - லட்சுமி தம்பதியின் குழந்தை இது என உறுதி செய்தனர். பின்னர் குழந்தையை பெற்றொரிடம் ஒப்படைத்தனர்.
Next Story