எலியாட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்திய கடலோர காவல் படையினர்
சர்வதேச கடலோர துப்புரவு தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படையின் சார்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
சர்வதேச கடலோர துப்புரவு தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படையின் சார்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலோர காவல் படை அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்களுடன் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர காவல்படை அதிகாரி அலோக் பட்னாகர் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
Next Story