10 மாத குழந்தையை கடத்த முயற்சி செய்த பெண் கைது

சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் 10 மாத குழந்தையை கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 மாத குழந்தையை கடத்த முயற்சி செய்த பெண் கைது
x
சென்னை பிரபாகரன் -  சோனியா தம்பதியின் 10 மாத ஆண் குழந்தைக்கும்,  கார்த்திக் - நந்தினி தம்பதியின் 9 மாத குழந்தைக்கும் எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் ஒரே பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை இரவு சோனியா கழிவறைக்கு சென்றிருந்தபோது, அவரின் குழந்தையை நந்தினி கடத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. 

சோனியா கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள், நந்தினியை குழந்தையுடன் கையும் களவுமாக பிடித்து, எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  சோனியாவின் குழந்தை அழுததாகவும் அதை ஆசுவாசப்படுத்த தூக்கிக்கொண்டு வந்ததாகவும் போலீசாரிடம் நந்தினி தெரிவித்திருக்கிறார். இருப்பினும், குழந்தையை கடத்த முயற்சி செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் நந்தினி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்