முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர்கள் போராட்டம் - 50,000 மீனவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 17-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 17-ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதற்காக பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜாவிடம் மீனவர்கள் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
ஆனால், முகத்துவாரத்தில் போராட அனுமதி மறுக்கப்பட்டாலும், குடும்ப குடும்பங்களாக படகில் சென்று, முகத்துவாரத்தில் திட்டமிட்டபடி வரும் 17-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
Next Story