நாசாவில் சர்வதேச அறிவியல் மாநாடு : கிருஷ்ணகிரியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தேர்வு

நாசாவில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் பங்கேற்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாசாவில் சர்வதேச அறிவியல் மாநாடு : கிருஷ்ணகிரியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தேர்வு
x
ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியின்  மகள் மகாலட்சுமி. தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மகாலட்சுமி, இந்திய அளவில் நடைபெற்ற தேசிய விண்வெளி அறிவியல் கட்டுரை போட்டியில், தேர்வானார். இந்திய அளவில் மகாலட்சுமியுடன் தேர்வான 10 பேரும், நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் சர்வதேச அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்