சாதி பெயரை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்...

வேலூர் மாவட்டம் ஒழுகூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித்தை செல்வம் என்பவர் சாதி பெயரை சொல்லி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சாதி பெயரை சொல்லி திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்...
x
வேலூர் மாவட்டம் ஒழுகூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அஜித், இருசக்கர வாகனத்தில் வாலாஜாபேட்டைக்கு சென்றுள்ளார். வண்டி பாதியில் நிற்கவே எதிரே வந்தவரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் அஜித்தை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய அஜித் நடந்த சம்பவத்தை கூறி வீட்டாரிடம் அழுது உள்ளார். பின்னர் வீட்டின் பின்புறம் தூங்கச் செல்வதாக தெரிவித்து சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில் செல்வம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்