திருப்பூரில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
திருமணம் தடைபட்டதால் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி, திருப்பூர் கே.பி.என் காலனி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் திவ்யாவுக்கும், வாடிப்பட்டி சேதுபாண்டி மகன் அருண்பாண்டிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. கார் மெக்கானிக்காக அருண்பாண்டியன் வேலை பார்த்து வரும் நிலையில், முதலில் இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஒருகட்டத்தில் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், அருண்பாண்டியன் தந்தை காலமானார். இதனால் 3 மாதம் திருமணம் தடைபட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை தமது உறவினர் வீட்டிற்கு வருமாறு திவ்யாவை அருண்பாண்டியன் அழைத்துள்ளார். இந்நிலையில் ஊருக்கு சென்ற உறவினர்கள் வீட்டிற்கு திரும்பிய போது, இருவரும் புத்தாடைகள் அணிந்தபடி, தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து இருவர் உடலையும் கைப்பற்றி, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story