"ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும்" - காவல் ஆணையர்

ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு முகாமில் ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கேட்டுக்கொண்டார்.
ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் - காவல் ஆணையர்
x
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பெரு மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், பெரும்பாலான சாலை விபத்துக்களில் உயிரிழப்புக்கு காரணம் ஹெல்மெட் அணியாதது என தெரிவித்தார். ஹெல்மெட் அணிவதை ஒரு கலாச்சாரமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்