தீர்த்தவாரி உற்சவம் - தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்தம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மோர்ப்பண்ணை கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
கடந்த மூன்றாம் தேதி திருவிழா தொடங்கியதில் இருந்து, தினசரி வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று விநாயகர் திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இன்று நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில், 10 கிராமங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story