பெண்ணை குடிபோதையில் சரமாரியாக தாக்கிய முன்னாள் கவுன்சிலர்..!
பெரம்பலூரில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் சத்யா என்ற பெண்ணை திமுகவின் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கவுன்சிலருமான செல்வகுமார் என்பவர் குடிபோதையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.
சத்யாவிற்கும், செல்வகுமாருக்கும் இடையே பணத்தகராறு இருந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதியன்று சத்யாவின் பியூட்டி பார்லருக்குள் நுழைந்த செல்வகுமார் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Next Story