கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த கார் : இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

தர்மபுரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தங்கவேலு குடும்பத்தினருடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் சென்ற போது கார் நிலைதடுமாறி சாலையோர கிணற்றுக்குள் விழுந்தது.
கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் விழுந்த கார் : இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு
x
தர்மபுரி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தங்கவேலு, குடும்பத்தினருடன், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கார் மூலம் போச்சம்பள்ளி சென்றுள்ளார். பாரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் நிலைதடுமாறி சாலையோர கிணற்றுக்குள் விழுந்தது. காரில் இருந்த தங்கவேல் உள்பட பெரியவர்கள் 4 பேர் வெளியே குதித்து தப்பித்துள்ளனர். ஆனால் சிறுமிகள் தர்ஷினி மற்றும் வர்ஷினி காருடன் நீரில் மூழ்கியுள்ளனர்.  பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இரண்டு குழந்தைளின் சடலங்கள் மீட்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்