தமிழகம் முழுவதும் நடைபெற்ற லோக் அதாலத் : முடிவுக்கு வந்த 75,000 வழக்குகள்...
தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்தில், சுமார், 179 கோடி ரூபாய் மதிப்பிலான 75 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள் மதுரை கிளையில் 6 அமர்வுகள் என மாவட்ட நீதிமன்றம் உட்பட தமிழகம் முழுவதும் 447 அமர்வுகளில் காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் பிரச்சனை தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பிலான, வழக்குகள் தீர்வு காணப்பட்டதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது
Next Story