18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை மீட்டு தரக் கோரி, பெற்றோர், மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
18-வயது நிரம்பாத கல்லூரி மாணவி கடத்தல் - பெற்றோர் கோட்டாட்சியரிடம் புகார் மனு
x
சங்கரன்பந்தலை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள்,  பொறையார்  தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5-ம் தேதி மாணவி கல்லூரிக்கு சென்று திரும்பிய போது கூடலூரை சேர்ந்த நரசிம்மன் என்பவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து மாணவியை கடத்தியதாக கூறப்படுகிறது. 
இது தொடர்பாக செம்பனார்கோவில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்
குற்றம்சாட்டியுள்ளனர்.இதனையடுத்து அவர்கள்  மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்