மிகவும் பழமைவாய்ந்த பாலம் - சீரமைத்து தர மக்கள் கோரிக்கை

எடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மிகவும் பழமைவாய்ந்த பாலம் - சீரமைத்து தர மக்கள் கோரிக்கை
x
எடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  பூலாம்பட்டியிலிருந்து பல கிராமங்களுக்கு  அப்பகுதியிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பாலம் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. இந்த பாலம் கடந்த 1955ஆண்டு அப்போதைய போக்குவரத்திற்கேற்ப மாட்டுவண்டி, மிதிவண்டி செல்வதற்கு தகுந்தாற்போல அமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது விவசாயிகளும் வாகனங்களும் அதிகளவில் சென்று வருவதால் பாலம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்