மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பங்குசந்தை ஆலோசகர் கடத்தல்

சென்னை மதுரவாயலில் பங்கு சந்தை ஆலோசகரை காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பங்குசந்தை ஆலோசகர் கடத்தல்
x
சென்னை மதுரவாயலில் பங்கு சந்தை ஆலோசகரை காரில் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெங்களூரில் பங்கு சந்தை நிறுவனம் நடத்தி வந்துள்ளார். மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அவர், பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, நேற்று இரவு சென்னை திரும்பியுள்ளார். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காரில் வீடு திரும்பி கொண்டிருந்த கணேஷை, மதுரவாயல் அருகே  பின் தொடர்ந்து வந்த 4 பேர் வழிமறித்து காரில் கடத்தியுள்ளனர். இது குறித்து டாக்சி டிரைவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்